யாழ். வடமராட்சியில் 30 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

19 0

சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் வவுனியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் .

கைதுசெய்யப்பட்டவர்கள் வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த 35,36 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர்களை மருதங்கேணி பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.