இஸ்ரேலினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் உயிரிழந்துள்ளார் என பாலஸ்தீன சிறைக்கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்பு காரணங்களிற்காக ஒவெர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் அவர் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் என இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை உறுதி செய்துள்ளது.
உயிரிழப்பிற்கான காரணங்களை வெளியிடாத இஸ்ரேல் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படையினர் பல தடவைகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்சிபா மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவர் பணியாற்றிவந்தார்.
காசாவின் வடபகுதியில் உள்ள அல்அவாட மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலிய படையினர் அவரை கைதுசெய்தனர்.
இந்த மரணச்செய்தி மனித ஆன்மாவினால் தாங்க முடியாதது என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் மர்வன் அபு சாடா தெரிவித்துள்ளார்.