கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் – மூன்று இந்தியர்கள் கைது

17 0

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டமை தொடர்பில் மூன்று இந்தியர்களை கனடா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புள்ளதா என விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஜூன் மாதம் சீக்கியர்கள் அதிகம் வாழும்வான்கூவரில் ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதற்கு சில மாதங்களின் பின்னர் இந்த கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும்  தொடர்புள்ளது என கனடா பிரதமர் தெரிவித்தமை பெரும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியது.

கரன்பிரீட் சிங் கமல்பிரீட் சிங் கரன் பிரார் என்ற மூவரே கைதுசெய்யப்பட்டனர்.