கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் 45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர் உட்பட 3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்பிலான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (30) கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது .
2013 ஓகஸ்ட் முதலாம் திகதி கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சுத்தமான நீரை வழங்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

