போதைப்பொருட்களுடன் 17 பெண்கள் உட்பட 720 பேர் கைது!

118 0

நாடளாவிய ரீதியில் நேற்று (29) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 17 பெண்கள் உட்பட 720 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 22 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 8 பேரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 142 கிராம் ஹெரோயின், 142 கிராம் ஐஸ் , 244 கிராம் கஞ்சா , மற்றும் 196 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.