வாகன விபத்தில் ஒருவர் பலி!

20 0

புத்தளம் – அநுராதபுரம் ஏ-12 வீதியில் பண்டுலகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்ததாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பண்டுலகம பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லால் என்ற 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.