பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்காற்று விசாரணைகளில் ஏற்படும் தாமதத்துக்கான தீர்வுகள்

107 0

பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்காற்று விசாரணைகளில் ஏற்படும் தாமதத்துக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்து, குழுவின் அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கையே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகளுக்கு எதிரான ஒழுக்காற்று நடைமுறை தொடர்பான விசாரணைகளுக்கு நீண்டகாலமாக எடுத்துக் கொள்ளப்பட்டதன் காரணமாக சம்பள அதிகரிப்பு, கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் போன்ற நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.