கிளிநொச்சியில் வாகனம் தடம் புரண்டதில் ஒருவர் காயம்

17 0

கிளிநொச்சி  A9 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று தடம் புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (28-04-2024) காலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம்   நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போயுள்ளதாலே குறித்த டிப்பர் வாகனம் A9 வீதியின் நடுவே தடம் புரண்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஏனையோர் உயிர் பிழைத்துள்ளனர்.விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன் துண்டிக்கப்பட்டு இருந்த A9 வீதியின் ஊடான போக்குவரத்தையும் சீர் செய்துள்ளனர்.