அங்கொட லொக்காவின் ஆயுதங்கள், துப்பாக்கிகள் ஹரக்கட்டாவிடம்!

19 0

அங்கொட லொக்காவின் மரணத்தின் பின்னர்  புதிய 25  துப்பாக்கிகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபா  பெறுமதியுடைய  சொத்துக்கள் பாதாள உலக தலைவன்  ஹரக்கட்டாவின் கைகளுக்குச் சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வு  பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிய போதைப்பொருள் வலையமைப்பிடமிருந்து பெறப்பட்ட ஹெரோயினுடன் அங்கொட லொக்கா  குழுவுக்கு இந்த கைத்துப்பாக்கிகள் அனுப்பப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அங்கொட லொக்காவின்  மரணத்தின் பின்னர் அங்கொட லொக்கா  உயிருடன் இருப்பதாக நம்ப வைப்பதற்காக அவரது நெருங்கிய சகாக்களுக்கு  குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே  அங்கொட லொக்கா  கும்பலின் ஆயுதங்கள்,  போதைப்பொருள் மற்றும் பணம் என்பன பாதாள உலக தலைவர் ஹரக் கட்டாவினால் அபகரிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.