காதி நீதிபதி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது !

18 0

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 5,000 ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட காதி நீதிபதி புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.