சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

17 0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரிக்கு அருகே  கட்டாக்காலிகளாக திரிந்த இரு மாடுகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன.

இந்த விபத்து  நேற்று சனிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் மற்றும்  சம்மாந்துறை பிரதேச சபைக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சம்மாந்துறை பகுதி வீதிகளில்  கட்டாக்காலி மாடுகள் , ஆடுகள் , நாய்கள்  எண்ணிக்கை அதிகளவிலுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ் சுமத்தியிருந்தனர் .

அத்துடன் திண்மக்கழிவுகள் உரிய முறையில் அகற்றாமையினால் கட்டாக்காலி  , மாடுகள் ஆடுகள் , நாய்கள்  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.