யாழில் கரு வளர்ச்சிக்கான சுக நல வைத்திய நிலையம்

12 0

சிவபூமி அறக்கட்டளை செயற்பாட்டில் அடுத்தகட்டமாக யாழ்ப்பாணத்தில்  கரு வளர்ச்சிக்கான சுக நல வைத்திய நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவபூமி  அறக்கட்டளை கடந்த 23 ஆண்டுகளாக இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதை யாவரும் அறிவர் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான   பாடசாலை, முதியோர் இல்லங்கள், கீரிமலை மடம் ,குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமம், மயிலிட்டி சிவபூமி கந்தபுராண மடம், நாவற்குழி திருவாசக அரண்மனை ,நாவற்குழி சிவபூமி அருங்காட்சியகம்,திருகோணமலை சிவபூமி யாத்திரிகர் மடம் ,சிவபூமி பாடசாலை, கிளிநொச்சி கனகபுரம் சிவபூமிப் பாடசாலை ,மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை   திருமந்திர அரண்மனை ,பம்பலப்பிட்டி சிவபூமி ஆத்மீக நிலையம் ,கண்டி கலகா சிவபூமி மலையக ஆச்சிரமம் , மலையக மாணவர் கல்வி விருத்தி நிலையம் இவற்றைக் கடந்த காலங்களிலே அன்பர்களின்  பூரண ஒத்துழைப்புடன் மேலும் சிறப்பாக நடாத்தி வருகின்றோம்.

மேலும் லண்டன் அவயம் அறக்கட்டளையின் உதவியுடன் ஆனைக்கோட்டையில் சிவபூமி அவயம் இலவச வைத்தியசாலை, இயக்கச்சி சிவபூமி இலவச வைத்தியசாலை, கண்டி கலகாவில் சிவபூமி இலவச அபய வைத்தியசாலை போன்றவற்றை நடாத்தி வருகின்றோம்

இத்தனைக்கும் மத்தியில் எமது பணிகள் விரிவடைந்து போகும் நிலையில் ஆதரவற்ற சிறுவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த நிதி உதவி வழங்கல் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவை ஏற்படுகின்றபோது தேவைகளை செய்து வருகின்றோம்.

பத்திரிகை தொலைக்காட்சி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் புற்றுநோய் வைத்தியசாலைக்கு பாயாசத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகின்றோம் இந்த அரிய பணிகளை இறை அருளாள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த ஆண்டு புதிய செயற்றிட்டமாக யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் இரண்டு மாடிக் கட்டடத்தை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். குறிப்பாக இந்தக் கட்டடத்தை புகழ்பூத்த வழக்கறிஞர் செனற்றர் எஸ்.ஆர்.கனகநாயகம் அவருடைய இல்லத்தை அவுஸ்திரேலியாவில் வாழும் அவருடைய மகள் மருமகன் டாக்டர் பாலசுப்பிரமணியம் சாவித்திரி தேவி தம்பதிகள் எமக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள் எம்முடைய அறக்கட்டளையூடாக  எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் இணைந்து பெண்கள் சுக நல நிலையத்தை யாழ் போதனா வைத்தியசாலையுடன் ஒப்பந்தம் செய்து திறந்து வைக்கவுள்ளோம்

குறிப்பாக இங்கு கருவளச்சி சிசிக்கை நிலையம் குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கான சிகிச்சை நிலையம் அமையவுள்ளது. அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கவுள்ளோம்.

பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் சிவபூமி நடவடிக்கை எடுப்பதால் இந்த இல்லத்தை கையளிப்பதாக எமக்கு வாக்குறுதி அளித்தார் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்ஆர் கனகஈஸ்வரன்  பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த சுக நல நிலையத்தை திறந்து வைக்கின்றார்.

மேலும் வரவேற்புரையை யாழ்.போதனா வைத்திய சாலை ந.சரவணபவன் தொடக்க உரையை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ந.சத்தியமூர்த்தி நிகழத்தவுள்ளதுடன் வாழ்த்துரைகளை யாழ். புல்கலைக்கழக துணைவேந்தனர் ஸ்ரீ சற்குணராசா மற்றும் யாழ.மருத்துவப் பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் அறிமுக உரையை யாழ்.மருத்துவ பீட விரிவரையாளர் வைத்திய நிபுணர் பால கோபி யாழ்.வைத்திநிபுணர் சி.ரகுராமன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.