சகோதரியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற அண்ணன் – மஸ்கெலியாவில் சம்பவம்

13 0

23 வயது வளர்ப்பு மகன் ஒருவர் தனது சகோதரியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை நேற்று வெள்ளிக்கிழமை (19) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் சந்தேக நபரை எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணித்து உள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் வியாழக்கிழமைமாலை சகோதரி மூலம் கிடைக்க பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்தே 23 வயது உடைய சந்தேக நபரை மஸ்கெலியா  குற்ற தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.