கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் இருவர் உட்பட 4 பேர் போதைப்பொருளுடன் கைது!

13 0

சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

510 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் முல்லேரிய பிரதேசத்தில் வைத்து குறித்த குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.