அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்!

24 0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி தற்போது அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அருட்தந்தைக்கு அனுப்பிய அழைப்பாணைக் கடிதத்தில், ‘உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பான சூழ்நிலைகள் உங்களுக்குத் தெரியும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதால், அது குறித்து உங்களிடம் விசாரிக்க உத்தேசித்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.