புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடியதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தலாத்துஓயா பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான கலால் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.