நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 9 பெண்கள் உட்பட 703 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடியாகவுள்ள 6 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த யுக்திய நடவடிக்கையின் போது மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 416 சுற்றிவளைப்புகளில் 410 ஆண்களும் 6 பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் , ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.