கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக தொடரும் கலந்துரையாடல்

12 0

சர்வதேச இறையாண்மை பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பாக பத்திர உரிமையாளர்களுடன் உடன்பாடு எட்டப்படுவதற்காக தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் இலங்கை அதிகாரிகள் நல்லெண்ணத்துடன் இணைந்து கொள்வார்கள் என்றும், இலங்கை அதிகாரிகள் அனைவரையும் நியாயமாக கையாள்வதற்கும் அத்தகைய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் பணியாற்றுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகிறார்.