மஹகலுகொல்லவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

9 0

மஹகலுகொல்ல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹகலுகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நாமளுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபராவார்.

இவர் பராமரித்து வரும்  தோட்டத்தைக் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் தனது தோட்டத்திற்குச் சென்றிருந்த போதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் சியபலாந்துவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மஹகலுகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.