வவுனியா – தாலிக்குளத்தில் மதுபோதையில் கைகலப்பு: ஒருவர் காயம்!

15 0

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் மதுபோதையில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் வசிக்கும் இருவருக்கு இடையில் மது போதையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுக் கைகலப்பாக மாறியுள்ளது.இதன்போது, ஒருவர் மண்வெட்டியினால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த 27 வயது நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.