இரு குழுக்களுக்கிடையில் மோதல் : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி !

29 0

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை – பெட்டிகல பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பெட்டிகலவத்தையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்கள் இடையே நிலவிய முரண்பாட்டின் விளைவாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.