மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

27 0

திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி,  எதிர்வரும் 17 ஆம் திகதி திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. 78ஆயிரம் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இதன் மூலம் ஏலத்தில் விடப்படவுள்ளன.

91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளன.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 23 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் இதன்போது ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.