கிளிநொச்சியில் விபத்து : ஒருவர் படுகாயம்

13 0

கிளிநொச்சி பரந்தன் ஏ 35 வீதியில் டிப்பர் வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் பரந்தன் சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று (12-04-2024) காலை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் படுகாயமடைந்தவர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.