கிளிநொச்சியில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

17 0

கிளிநொச்சி பொலிஸ் பிரவுக்குட்பட்ட பெரியபரந்தன் பகுதியிலுள்ள நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து  ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியை சேர்ந்த 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.