வடமராட்சி பாடசாலை அதிபரையும் வலயக் கல்விப் பணிப்பாளரையும் விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

20 0

வடமராட்சியில் உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபரையும் வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளரையும் எதிர்வரும் 24.04.2024 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி பாடசாலையில் நிதி சேகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட சிலர் வாட்ஸப் சமூக ஊடக குழு ஒன்றின் மூலம் மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் பெற்று வந்துள்ளதாக நேற்று புதன்கிழமையன்று செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்தவகையில் குறித்த பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக நேற்றையதினம் ஒரு தரப்பினர் போராட்டம் செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிதி சேகரிப்பு குறித்து விசாரணை நடாத்துவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.