வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் (காணொளி)

319 0

வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்ற திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நகரசபை உப தலைவர் க.சந்திரகுலசிங்கம் மோகன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன்,  கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் தமிழ்மணி அகளங்கன், முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் அருள்வேல்நாயகி, தாண்டிக்குளம் கிராம சேவையாளர் யோகநாதன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்  திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இதன்போது மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.

அத்துடன் 2016ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன்,

ஆசிரியர் கௌரவிப்பு, ஆற்றலரசி மாணவர்களுக்கான கௌரவிப்பு, கண்ணன் நடனம், வினோத உடை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.