உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு(காணொளி)

250 0

உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களை உள்ளடக்கிய உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு, கல்லடி நொச்சிமுனையில் உள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் எம்.ஜதிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.ரவீந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் எம்.லக்ஷ்மிகாந்தன் உட்பட சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது உதயம் விழிப்புலனற்றோர்சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் புதுவருடத்தை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் புத்தாடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் மதியபோசனமும் வழங்கப்பட்டது.