திருகோணமலையில் போதைப்பொருள் வியாபாரி கைது!

20 0

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேத்ராகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவுடன் இணைந்து தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய நபரொருவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  3 கிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, ஹெரோயின் போதைப்பொருள் 84 பக்கற்றுகளாக பொதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஒரு போதைப் பொருள் வியாபாரி எனவும் அவர் மீது நீதிமன்றத்தில் நான்கு  வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.