நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் கைதுகளுக்கு விருந்தினர்களை பார்வையிட அனுமதி

15 0

நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு விருந்தினர்களை பார்வையிட அனுமதிக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் சிறைக்கைதிகளாக இருக்கும் முஸ்லிம் கைதிகளுக்கு நாளை 11ஆம் திகதி விருந்தினர்களை பார்வையிட தேவையான நடவடிக்கைகளை சிறைச்சாலை திணைக்களம்  எடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (ஊடக பேச்சாளர்) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சிறைக்கைதிகளின் உறவினர்களினால் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டுவரும் உணவு, இனிப்பு பண்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், ஒருவருக்கு தேவையான அளவு கொண்டுவர முடியும் என்பதுடன்  தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் உரிய சுகாதார பாதுகாப்பு முறைமையின் கீழ் குறித்த பொருட்களை பெற்றுக்கொடு்க்க அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.