நாட்டையும் கட்சியையும் சாப்பிட்டவர் தொடர்பில் வாய் திறக்கும் சந்திரிகா!

113 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அதற்கு உதவ தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (08) நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை அழைத்து வந்தேன். அவரில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் நாட்டையும் கட்சியையும் சாப்பிட்டு விட்டார். இருப்பினும்   அந்தத் தவறு இன்று சரி செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.