திருகோணமலை – உப்புவெளியில் விபத்து ; பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

17 0

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் 5ஆம் கட்டை பகுதியில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் திருகோணமலை  தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் சீனக்குடாவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் (வயது 35) ஆவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.