புத்தளம் பகுதியில் இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டு கல்வில சூழலியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டது.
புத்தளம் , தேவனுவர பகுதியில் வெள்ளிக்கிழமை (5) அதிகாலை இராட்சத முதலையொன்று தனியார் ஒருவரின் வீட்டு வளவினுள் உற்புகுந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகள் கடும் பிரயத்தணத்திற்கு மத்தியில் இந்த முதலையைப் பிடித்து கல்வில சூழலியல் பூங்காவில் விடுவித்துள்ளனர்.

குறித்த முதலை சுமார் 9 அடி நீளமுடையது எனவும் சுமார் 150 கிலோ கிராம் எடைக் கொண்டு காணப்படுவதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

