80 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் அதிகாரி கைது

20 0

வாகனம் ஒன்று தொடர்பில் அறிக்கை  வழங்குவதற்காக 80 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இலஞ்சமாகக் கோரிய பணத்தை வழங்குவதற்காக முறைப்பாட்டாளர், சுகாதார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவிற்கு முன்பாக சென்றிருந்த போது பணத்தைப் பெறுவதற்காக குறித்த அதிகாரி அங்கு வந்த போதே  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.