ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் உயிரிழப்பு

21 0

ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியை சேர்ந்த  68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு சென்று வழிபட்ட பின்னர் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் இயலாத நிலையில் வயல் வரம்பொன்றில் அமர்ந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.