தெஹிவளை – மஹரகம பிரதான வீதியில் அம்பில்லவத்தை சந்திக்கு அருகில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் சேவை பெற வந்த ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அரவல (52) வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

