முல்லைத்தீவில் நூதன முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

18 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் நீர் பொருத்தும் குழாய் மாதிரியின் மூலம் கோட உற்பத்தி செய்து சட்டவிரோத கசிப்பு காச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை  முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டிற்குள் சென்ற பொலிஸார் அங்கு நிலத்தில் புதைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானமான கேடாவினை அதன் மேல் குழாய் மாதிரி செய்து வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதன்போது  இரு பெரல் கோட மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைதுசெய்த முள்ளியவளை பொலிஸார் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் இன்று (30.03.2024) மாவட்ட நீதிமன்றில் முன்னிபைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனஇ

சந்தேக நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தனது காணியில் ஆங்காங்கே கசிப்பு காச்சுவதற்கான முதல்நிலை தயாரிப்பான கோடவினை கலந்து நிலத்தில் புதைத்துவைத்து அதனை நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் கொண்டு எடுத்து வீட்டில் வைத்து கசிப்பு காச்சி விற்பனை செய்துவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.