ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருக்கும் நெருக்கடி

30 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் மூவருக்கும் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை கடவுச்சீட்டு இல்லை என இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருக்கும் நெருக்கடி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடன் இலங்கையின் பயங்கரவாத தகவல் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அதற்கான ஏற்பாட்டினை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களின் உடல் பாகங்கள் செயலிழக்கும் வகையில் இந்தியா அரசினால் மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதன் மூலம் அவர்கள் ஒரு வருடத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.