பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி ; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

16 0

ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மத்துமகல ராகம  பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்  வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இவரை  சுட முயன்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது .

இந்நிலையில், அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர்கள்  தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் சிசிரிவி காட்சிகள்  பதிவாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.