“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

19 0

“எம்.பி சீட் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய கணேசமூர்த்தி இப்படி எங்களை நட்டாற்றில் விட்டு விட்டு போய்விட்டார்.” என்று வைகோ கண்ணீர் மல்க உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.அவருக்கு அஞ்சலி செலுத்த கோவை வந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, எம்.பி சீட்டுகாக கணேசமூர்த்தி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று விளக்கினார்.