வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு ; கடுவலையில் சம்பவம்

11 0

கடுவலை – கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கடுவலை – கொத்தலாவல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார்.

இவரது இரு பிள்ளைகளும் வேலைக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இரத்தம் கசிந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அணிந்திருக்கும் நகைகள் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்ததையடுத்து இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.