தலவாக்கலை நகரில் சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை

21 0

தலவாக்கலை நகரில் நேற்று (23) சனிக்கிழமை சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்தல், சுகாதாரமற்ற உணவகங்கள் போன்றவற்றுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும் என கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, பண்டிகை காலத்தை முன்னிட்டு கொட்டகலை, தலவாக்கலை பகுதிகளில் திடீர் பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.