33 வயது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த கணவர் கைது!

189 0

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பிங்கிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பிங்கிரிய, தியகெலியாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணாவார்.

குடும்பத் தகராறு காரணமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கணவர் , மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய ந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரான 40 வயதுடைய கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.