மஸ்கெலியா பிரதேசத்திற்குட்பட்ட மவுஸ்ஸாகலை பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் மூலம் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவராவார்.
இந்த சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.