கடற்படையினரின் வாகனத்தினால் மோதப்பட்டு பெண் உயிரிழப்பு!

25 0

திருகோணமலை வீதியில் குருணாகலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த கடற்படை வாகனத்தினால் மோதப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தொரட்டியாவை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோரயாய பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பெண் நேற்று புதன்கிழமை (20) இரவு வீதியை கடக்க முற்பட்டவேளை கடற்படை வாகனம்  இவரை மோதியுள்ளது.

விபத்துக்குள்ளான பெண் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.  இந்த பெண் தோரயாய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவராவார்.

சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.