மொரட்டுவை பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவரால் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

