இளைஞன் விபத்தில் உயிரிழப்பு!

113 0

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பளைப் பகுதியை 21 வயதுடைய இளைஞனே  விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதால் தான் தலையில் படுகாயம் ஏற்பட்டது என மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.