கோட்டா நியமித்த ஆணைக்குழு தொடர்பான நீதிமன்ற விசாரணை நிறைவு!

32 0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் முடிவுகளை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பான தனது தீர்ப்பை  அறிவிப்பதனை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க மற்றும் பலர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.