யாழில் கசிப்புடன் கைதான இளைஞனுக்கு 09 மாத சிறை

26 0

யாழில் கசிப்புடன் கைதான 19 வயது இளைஞனுக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டமும் 09 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்புடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற விசாரணைகளின் போது , இளைஞன் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து  50 ஆயிரம் ரூபாய் தண்டமும் 09 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் முன்னரும் கசிப்புடன் கைதாகி , நீதிமன்றால் தண்டிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.