மரண தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவித்து விடுதலை செய்த மேன்முறையிட்டு நீதிமன்றம்!

21 0

ருவன்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமை தொடர்பான வழக்கில்  குற்றவாளியாக காணப்பட்டு  மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுவித்து விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்தபோதே நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்தத் தீர்ப்பபை வழங்கினார்.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி  ருவன்வெல்ல பிரதேசத்தில் தனிப்பட்ட  தகராறின்போது  ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமை தொடர்பில்  சட்டமா அதிபர் கேகாலை மேல் நீதிமன்றில்  குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட விசாரணையின் பின்னர், 2018 ஆகஸ்ட் 9 ஆம் திகதி தீர்ப்பை அறிவித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகத்துக்கிடமின்றி  குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே குறித்த நபர் தரப்பிலான மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்தத் தீர்ப்பபை வழங்கினார்.