கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற வசதிகளைச் செய்து கொடுத்தேன்!

45 0

அன்றைய தினம் (அரகலய)  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு  தான் வசதிகளைச் செய்து கொடுத்ததாக ஓமல்பே சோபித தேரர்  தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தேவையான வசதிகளை  அவருக்கு  தான் ஏற்படுத்திக் கொடுத்ததனை  கோட்டாபய ராஜபக்க்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் கோட்டாபயவுக்கு எதிரானவர்கள் அல்லர். தற்போதுள்ள முறைமைக்கு எதிரானவர்கள்” என கூறிய சோபித தேரர், கோட்டாபயவை நாட்டை விட்டு வெளியேற்றும் சதி என்ன என்பதை தற்போதைய தலைவரால் ஒரு வார்த்தையில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.